| |
---|---|
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
| |
| அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் |
| ஆலயம் தொழுவது சாலவும் நன்று |
| இல்லறம் அல்லது நல்லறம் அன்று |
| ஈயார் தேட்டை தீயார் கொள்வர் |
| உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு |
| ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் |
| எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் |
| ஏவா மக்கள் மூவா மருந்து |
| ஐயம் புகினும் செய்வன செய் |
| ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு |
| ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் |
| ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு |
| அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
|
| கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை |
| காவல் தானே பாவையர்க்கு அழகு |
| கிட்டாதாயின் வெட்டென மற |
| கீழோர் ஆயினும் தாழ உரை |
| குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை |
| கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் |
| கெடுவது செய்யின் விடுவது கருமம் |
| கேட்டில் உறுதி கூட்டும் உடைமை |
| கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி |
| கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி |
| கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு |
| கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
|
| சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை |
| சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு |
| சிவத்தைப் பேணல் தவத்திற்கு அழகு |
| சீரைத் தேடின் ஏரைத் தேடு |
| சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் |
| சூதும் வாதும் வேதனை செய்யும் |
| செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் |
| சேமம் புகினும் யாமத்து உறங்கு |
| சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் |
| சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் |
| சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
|
| தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை |
| தாயிற் சிறந்ததொரு கொயிலும் இல்லை |
| திரை கடல் ஓடியும் திரவியம் தேடு |
| தீராக் கோபம் போராய் முடியும் |
| துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு |
| தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் |
| தெய்வம் சீறின் கைதவம் மாளும் |
| தேடாது அழிக்கின் பாடாய் முடியும் |
| தையும் மாசியும் வையகத்து உறங்கு |
| தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது |
| தோழனோடும் ஏழைமை பேசேல்
|
| நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் |
| நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை |
| நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை |
| நீரகம் பொருத்திய ஊரகத்து இரு |
| நுண்ணிய கருமமும் எண்ணித் துணி |
| நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு |
| நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை |
| நேரா நோன்பு சீராகாது |
| நைபவர் எனினும் நொய்ய உரையேல் |
| நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் |
| நோன்பு என்பது கொன்று தின்னாமை
|
| பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் |
| பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் |
| பிறன் மனை புகாமை அறம் எனத் தகும் |
| பீரம் பேணில் பாரம் தாங்கும் |
| புலையும் கொலையும் களவும் தவிர் |
| பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் |
| பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் |
| பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் |
| பையச் சென்றால் வையம் தாங்கும் |
| பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் |
| போனகம் என்பது தான் உழந்து உண்டல்
|
| மருந்தே ஆயினும் விருந்தோடு உண் |
| மாரி அல்லது காரியம் இல்லை |
| மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை |
| மீகாமண் இல்லா மரக்கலம் ஓடாது |
| முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் |
| மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் |
| மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு |
| மேழிச் செல்வம் கோழை படாது |
| மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு |
| மொழிவது மறுக்கின் அழிவது கருமம் |
| மோனம் என்பது ஞான வரம்பு
|
| வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண் |
| வானம் சுருங்கில் தானம் சுருங்கும் |
| விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் |
| வீரன் கேண்மை கூர் அம்பாகும் |
| உரவோர் என்கை இரவாது இருத்தல் |
| ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு |
| வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை |
| வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை |
| வைகல் தோறும் தெய்வம் தொழு |
| ஒத்த இடத்து நித்திரை கொள் |
| ஓதாவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
|