ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே
| - அறம் செய விறும்பு
- ஆறுவது சினம்
| - இயல்வது கரவேல்
- ஈவது விலக்கேல்
| - உடையது விளம்பேல்
- ஊக்கமது கைவிடேல்
| - எண் எழுத்து இகழேல்
- ஏற்பது இகழ்ச்சி
| - ஐயம் இட்டு உண்
| - ஒப்புரவு ஒழுகு
- ஓதுவது ஒழியேல்
| - ஔவியம் பேசேல்
| - அஃகஞ் சுருக்கேல்
| - கண்டு ஒன்று சொல்லேல்
- ஙப்போல் வளை
- சனி நீராடு
- ஞயம்பட உரை
- இடம்பட வீடு எடேல்
- இணக்கம் அறிந்து இணங்கு
- தந்தை தாய்ப் பேண்
- நன்றி மறவேல்
- பருவத்தே பயிர் செய்
- மண் பறித்து உண்ணேல்
- இயல்பு அலாதன செயேல்
- அரவம் ஆடேல்
- இலவம் பஞ்சில் துயில்
- வஞ்சகம் பேசேல்
- அழகு அலாதன செயேல்
- இளமையில் கல்
- அரனை மறவேல்
- அனந்தல் ஆடேல்
- கடிவது மற
- காப்பது விரதம்
- கிழமைப் பட வாழ்
- கீழ்மை அகற்று
- குணமது கைவிடேல்
- கூடிப் பிரியேல்
- கெடுப்பது ஒழி
- கேள்வி முயல்
- கைவினை கரவேல்
| - கொள்ளை விரும்பேல்
- கோதாட்டு ஒழி
- சக்கர நெறி நில்
- சான்றோர் இனத்திரு
- சித்திரம் பேசேல்
- சீர்மை மறவேல்
- சுளிக்கச் சொல்லேல்
- சூது விரும்பேல்
- செய்வன திருந்தச் செய்
- சேரிடம் அறிந்து சேர்
- சை எனத் திரியேல்
- சொல் சோர்வு படேல்
- சோம்பித் திரியேல்
- தக்கோன் எனத் திரி
- தானமது விரும்பு
- திருமாலுக்கு அடிமை செய்
- தீவினை அகற்று
- துன்பத்திற்கு இடங் கொடேல்
- தூக்கி வினை செய்
- தெய்வம் இகழேல்
- தேசத்தோடு ஒத்துவாழ்
- தையல் சொல் கேளேல்
- தொன்மை மறவேல்
- தோற்பன தொடரேல்
- நன்மை கடைப்பிடி
- நாடு ஒப்பன செய்
- நிலையில் பிரியேல்
- நீர் விளையாடேல்
- நுண்மை நுகரேல்
- நூல் பல கல்
- நெல் பயிர் விளை
- நேர்பட ஒழுகு
- நைவினை நணுகேல்
- நொய்ய உரையேல்
- நோய்க்கு இடம் கொடேல்
- பழிப்பன பகரேல்
- பாம்பொடு பழகேல்
- பிழைபடச் சொல்லேல்
- பீடு பெற நில்
- புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
- பூமி திருத்தி உண்
- பெரியாரைத் துணைக் கொள்
|
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |